Saturday, 28 June 2014

தமிழ் பொன்மொழிகள்


தெரிந்து கொள்வோம் :

தெரிந்து கொள்வோம் :
தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-
* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையகரர்கள் நுழை வாயில்"
என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.
* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்ற
என்பது பொறிக்கபட்டிருகும்.
* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்..
* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டிருக்கும்.
* 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில்
இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுக்கலாமா என்ற
விவாதத்தின் பொது ஆங்கிலேய
தளபதி இந்தியாவின்
மிகபெரியசொத்தான
திருக்குறளை நாம்
எடுத்து வந்தாகி விட்டது...இனிமேல்
அது வெறும்
மண்தான்..ஆகவே அது நமக்கு தேவை இல்லைஎன்று கூறினாராம்..
* உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாகஅதி
கமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல்
திருக்குறள்..

Friday, 13 June 2014

என் பள்ளி நினைவுகள்

எம் பள்ளி நினைவுகள் அவ்வப்போது மனதில் வந்து போகும். நினைத்து பார்ப்பதில் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி இளைந்தோடும் .இடைஇடையே ஆசிரியர் சொல்லிகொடுப்பதை வீட்டில் படிக்காமல் பள்ளி சென்று திட்டு வாங்கியதும் நினைவில் வந்து நிற்க்கும் .
எழுத்தில் வடிக்கும் பொழுது எதை விடுவது எதை எழுதுவது என்ற மயக்கம்,தயக்கம் மனதில் தோன்றி மறைகிறது . 

1. முதல் வகுப்பு- கிருத்துவர்கள் ஆலயத்தில் தான் அப்பள்ளி இயங்கியது. ஆசிரியர் எனக்கு ஒன்றுவிட்ட தாத்தா முறை.வகுப்பறையில் ஒரே குறும்பு தான் , பள்ளிக்கும் வீட்டிற்க்கும் இருபது அடி தூரம் தான் , பெரும்பாலும் வீடு பள்ளி என்றே பள்ளி நேரத்தில் கூட இருப்பேன்.இரண்டாம் வகுப்பும் இதே போலத் தான் கழிந்தன.

2. மூன்றாம் வகுப்பு-சும்மா பள்ளி சென்று வருவேன் என்ன படித்தேன் என்று கூட ஞாபகம் இல்லை .பொழுது சாய்ந்தால் போதும் கண்ணாமூஞ்சி விளையாட்டு தான் :) 

3. நான்காம் வகுப்பு- நல்ல ஆசிரியர் ; சொல்லிக்கொடுப்பதில் அப்படி ஓர் ஆர்வம் , நிறைய சொல்லி கொடுப்பார். கண்டிப்பானவர். அவர் சொல்லிக்கொடுப்பதை அடுத்த நாள் வீட்டில் படித்து வர வேண்டும் இல்லை என்றால் அடுத்த நாள் பெஞ்ச் மீது ஏறி நிற்க்க வேண்டி வரும். சில சமயம் அடிக்க கூட செய்வார். மிக அன்பாக பேசுவார். சிவந்த நிறமுடையவர். அழகானவரும் கூட.ஐந்தாம் வகுப்புக்கும் அவர் தான் . ஆங்கிலம் மிக அழகாக சொல்லி கொடுத்தார்.

4. ஆறாம்வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு- கணக்கு என்று வந்தால் இந்த வகுப்பு ஆசிரியர் தான் முதன் முதலில் ஞாபகத்திற்க்கு வருவார் . முகம் மங்களாக வந்து போகும் . கணக்கின் அடிப்படையே இவர் சொல்லி கொடுத்து தான் நான் அறிந்து கொண்டேன். நான் கணக்கில் சிறந்து விளங்க இவரே காரணம். அறிவியல் ஆசிரியையும் ஞாபகத்திற்க்கு வருபவர்.

5. எட்டாம் வகுப்பு- மிக அதிக நண்பகர்கள் ஏற்பட்டார்கள். காமிக்ஸ் அதிகம் படித்ததினால் உருவானார்கள். என்னிடம் ஓசி வாங்கிச் செல்வர். சனி மற்றும் ஞாயிற்று கிழைமைகளில் . எல்லா நண்பர்களும் என் வீட்டிற்க்கு வருவார்கள். பள்ளிக்குச் சென்று கபடி விளையடுவோம். குஷ்தி கூட விளையாடச் சென்றேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.அதனால் தான் என்னவோ பிற் காலத்தில் விளையாட்டு துறையில் (sports) ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்ததோ ?!. ஞாபகத்திற்க்கு வருபவர் கணக்கு ஆசிரியர் தான். மிக மகிழ்ச்சியான தருணம். 

6. ஒன்பது- வேறு பள்ளி அப்படி ஒன்றும் சொல்லிக்க ஏதும் இல்லை.

7. பத்து-பதினோன்று-பனிரெண்டு- நான் தமிழில் எழுதும் போது எழுத்துப்பிழை நிறைந்து காணப்படும் தமிழ் ஆசிரியையை மறக்க முடியாது. என் எதிர் வீட்டு நண்பர் கூட ஆசிரியர் தான் அவரும் எழுத்துப்பிழை நீங்க பயிற்சி அளித்தார்.

8. நான் பெற்ற கல்விக்கு ஆசிரியர்களின் உழைப்பு தான் காரணம் . வழிகாட்டியும் கூட. எப்போதும் ஞாபகத்திற்க்கு வருகின்றனர்.

9. I well come a commend from Mr ஆதி.

சிறுகதை மற்றும் தொடர்கதைகள்

டேய் பையா என்று அம்மா அழைக்கும் குரல் . அந்த பையனுக்கு பத்து வயது இருக்கும். அவன் பெயர் கந்தன். ஏம்மா சும்மா சும்மா கூப்பிடரெ . பாருடா வெயில் உச்சந்தலைக்கு வந்துட்டது இந்தா கஞ்சிய குடி ,குண்டாவில் கரசிய கஞ்சியை டம்லரில் ஊற்றி கொடுக்கிறாள். ஏம்மா எப்பதான் நெல்லஞ்ச்சோறு போடுவ பையன் குரலில் ஏமாற்றம் . இரவும் வருகிறது பையன் தூங்கி விடுகிறான் , அந்த தாய் இயலாமையால் வருத்தமடைகிறார் வாஞ்சையுடன் தலை முடியை கோதிவிடுகிறார் . மின்சாரம் இல்லா காலம் அது , மயான அமைதி , வாசலில் கிழிந்த பாயின் மீது அவர்கள் . இதமான காற்று வீசுகிறது . பையனின் அப்பாவை பற்றிய நினைவு அந்த தாயின் உள்ளத்தில் அரைவயிறு தூக்கம் வர மறுக்கிறது .

டேய் பையா அம்மாவின் குரல் ; போயி இந்த கோழியை விற்று வா போ . பக்கத்து ஊருக்கு நடந்து போக வேண்டும் . ஏம்மா இத எத்தனை ரூபாக்கு விக்கறது , பத்து சொல்லு எட்டு ரூபாய்க்கு கொடுத்திட்டு வா . முன்பாகவே கோழியின் கால்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. பையன் கோழியை தூக்கிக்கொண்டு நடக்கிறான். பக்கத்து ஊர் பக்கம் வர வர பையனின் கைகள் வலிக்க ஆரம்பித்தன. கை மாற்றி கை மாற்றி கோழியை தூக்கிக்கொண்டு நடக்கிறான். கை வலி குறைந்தபாடில்லை. பக்கத்து ஊரும் வருகிறது . கோழி கோழி என்று பையன் நடந்துகொண்டே கூவுகிறான் . சைக்கிளில் சென்ற பெரியவர் நின்று விசாரிக்கிறார் , தம்பி கோழி விக்கிறயா, வினவுகிறார். ஆமாம் பையன் தலை ஆட்டுகிறான் . எத்தனை ரூபாய்ப்பா. பதினாறு ரூபாய் என்கிறான் பையன் ஏம்ப்பா நீ விலை அதிகம் சொல்கிறாய் குறைத்து சொல் ; இத தூக்கி பாருங்க நிறைய கணம் என்கிறான் பையன். கோழியை வாங்கிய பெரியவர் கணம் பார்த்து பதினான்ங்கு ரூபாய் கொடுத்துச் செல்கிறார்.


டேய் பையா என்று அம்மாவின் குரல் ஒலிப்பது இல்லை . அம்மா படுத்தே இருக்கிறார் . பத்து பதினைந்து நாட்கள் இருக்கும் . ஊர் பெண்கள் வந்து வந்து பார்த்துச் செல்கின்றனர். இன்னைக்கி அம்மாவாசை இது தேறாது இந்த பையன் பாவம் , குசு குசு என்று பெண்கள் பேசுவது பையனின் காதிலும் விழுகிறது அந்த பையன் அவன் அம்மாவை பார்க்கிறான் அவனின் அம்மா கண் மூடி அசைவற்று படுத்திருக்கிறார். அம்மா செத்திருவாங்களா பையனின் நெஞ்சில் நெருடல் . ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார் ஏதோ மருந்து கொடுத்தார்.

சிறிது நாளில் டேய் பையா என்ற அம்மாவின் குரல். எதுக்கு அம்மா கூப்பிடற பையனின் குரல்.


வயிரு சுண்டி, குடல் சிறுத்து ,உணவுக்கு ஏங்கும் அவர்கள். 

" கொடியது கொடியது வருமை கொடியது இளமையில் வருமை அதை விட கொடியது அவ்வையின் வார்த்தையில் எத்துணை வலிமை" .